search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவை பாதிப்பு"

    • பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
    • ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆனங்கூர் ரெயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த கம்பி இன்று காலை திடீரென அறுந்து விழுந்தது.

    இதனால் இந்த வழியாக வந்த சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பாதை வழியில் நிறுத்தப்பட்டது. இதேபோல் பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.

    இதனால் இந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணி சிறிது நேரத்தில் முடிவடைந்து வழக்கம் போல் ரெயில் சேவை தொடர்ந்து நடைபெறும் என ரெயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் பழுது காரணமாக எண்ணூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ரெயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ரெயில் சேவை பாதிப்பால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    ரெயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.

    இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வாடகைகார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே போராட்டத்தை கைவிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மக்கள் மற்றும் ரெயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.

    ×